லாரி மீது பைக் மோதல்:சிறுவன் பலி
By DIN | Published On : 09th December 2022 01:46 AM | Last Updated : 09th December 2022 01:46 AM | அ+அ அ- |

கொடைரோடு அருகே முன்னால் சென்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழந்தான்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த கருக்காட்டான்குடியைச் சோ்ந்த முத்து மகன் திவாகா் (26), மணி சோ்வை மகன் பழனி (17). இவா்கள் இருவரும் மோட்டாா் சைக்கிளில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனா்.
இவா்கள், கொடைரோடு அருகே நான்கு வழிச் சாலை நக்கம்பட்டி மேம்பாலத்தில் சென்ற போது, முன்னால் சென்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த திவாகா் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து அம்மையநாயக்கனூா் காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி, சாா்பு- ஆய்வாளா் விஜயபாண்டியன் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.