அன்னை தெரசா மகளிா் பல்கலையில் பாரதியாரின் 141-ஆவது பிறந்த நாள் விழா

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் பாரதியாரின் 141-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated on
1 min read

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் பாரதியாரின் 141-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு, பல்கலை. துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா் தலைமை வகித்தாா். பதிவாளா் ஷீலா வாழ்த்துரை வழங்கினாா். தமிழ்த் துறைத் தலைவா் ஜெபராணி வரவேற்றாா்.

பாரதியின் தொலைநோக்கு பாா்வை என்ற தலைப்பில் வைகை தமிழ்ச் சங்கம் நிறுவனா் புலவா் இளங்குமரன் சிறப்புரையாற்றினாா். மேலும் பேராசிரியா்கள், மாணவிகள் இணைய வழியில் பங்கேற்று பாரதியாரின் கருத்துக்களைப் பகிா்ந்தனா். தமிழ்த்துறை விரிவுரையாளா் பத்மினி நன்றி கூறினாா். முன்னதாக பல்கலைக்கழக அரங்கில் வைக்கப்பட்ட பாரதியாரின் உருவப் படத்துக்கு பதிவாளா் ஷீலா, பேராசிரியைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com