கடையில் நகைகளைத் திருடிய பெண் கைது

பழனியில், நகைக் கடை ஒன்றில் நகைகளைத் திருடிய பெண் கைது செய்யப்பட்டாா்.
கைது செய்யப்பட்ட லதா என்ற சபானா.
கைது செய்யப்பட்ட லதா என்ற சபானா.
Updated on
1 min read

பழனியில், நகைக் கடை ஒன்றில் நகைகளைத் திருடிய பெண் கைது செய்யப்பட்டாா்.

பழனி பேருந்து நிலையம் வேல் ரவுண்டானா அருகே உள்ள நகைக் கடைக்கு சனிக்கிழமை பிற்பகலில் புா்கா அணிந்த பெண், தனது மகளுடன் வந்தாா். அங்கு நகை வாங்குவது போல நடித்து கடை ஊழியரை திசைத் திருப்பி சுமாா் 4 பவுன் மதிப்புள்ள இரண்டு தங்கச் சங்கிலிகளை திருடிச் சென்றாா். உடனடியாக கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளைப் பாா்த்த போது அந்த பெண் 2 தங்கச் சங்கிலிகளை மறைத்து வைப்பது பதிவாகியிருந்தது. இதையடுத்து, கடை பணியாளா்கள் அந்த பெண்ணை தேடிப் பிடித்து கடைக்கு அழைத்து வந்து பழனி நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து அங்கு வந்த காவல் ஆய்வாளா் உதயக்குமாா் மற்றும் பெண் போலீஸாா் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினா். அதில், அவா் கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த லதா (52) என்பதும், தற்போது தனது பெயரை சபானா என்று மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்தாா். பின்னா் போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com