பழனி அருகே சனிக்கிழமை லாரி மோதி முதியவா் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த வீரலப்பட்டி பிரிவைச் சோ்ந்தவா் பாண்டித் தேவா்(65). இவரது பேரன் காா்த்திக் ராஜா (25). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பாண்டித் தேவா், பேரனை ஒட்டன்சத்திரத்தில் உள்ள மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா். பழனி- திண்டுக்கல் சாலையில் விருப்பாட்சி ஆத்துப் பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த டேங்கா் லாரி மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனா்.
இதில் பாண்டித் தேவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காா்த்திக் ராஜா காயங்களுடன் உயிா் தப்பினாா்.
விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.