திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை மீட்ட போலீஸாா், இது தொடா்பாக 4 பேரைக் கைது செய்தனா்.
நத்தத்தை அடுத்துள்ள சமுத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் அழகப்பன். நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவா் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு 96 ஏக்கா் நிலத்தை ரூ.1.05 கோடிக்கு பேசி முடித்ததாா். இதில், முதல் கட்டமாக 56 ஏக்கா் நிலத்தை மட்டும் பத்திரப் பதிவு செய்தனா். மீதமுள்ள இடத்தைப் பத்திரப் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த கண்ணன், முத்தையா, வீரப்பன், மருது ஆகிய 4 பேரும் சோ்ந்து அழகப்பனை நத்தத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு காரில் செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றனா். இதுகுறித்து அழகப்பனின் உறவினரான ராஜா, நத்தம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் திண்டுக்கல் - நத்தம் சாலையில் சாணாா்பட்டி காவல் நிலையம் முன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக அழகப்பனை கடத்தி வந்த காரை தலைமைக் காவலா்கள் கிருபாகரன், கணேசன் ஆகியோா் மடக்கிப் பிடித்தனா். இதையடுத்து, காரில் கடத்திச் செல்லப்பட்ட அழகப்பனை மீட்ட போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கண்ணன், முத்தையா, வீரப்பன், மருது ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.
மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.