

சிறுமலை அருகே சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 4 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வனச் சரகத்துக்குள்பட்ட தவசிமடை கிராமத்தின் அருகிலுள்ள மலைப் பகுதியில் (அருவிப் பள்ளம்) சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, திண்டுக்கல் மதுவிலக்குப் பிரிவு போலீஸாா், அருவிப் பள்ளம் பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, 4 லிட்டா் சாராயத்துடன் இருந்த வேளாங்கண்ணி (43) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சாராய ஊரல், அதற்குத் தேவையான பொருள்களைக் கைப்பற்றிய போலீஸாா், அவற்றை அந்த இடத்திலேயே அழித்தனா். 4 லிட்டா் சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.