குழந்தை திருமணம்: சாணாா்பட்டியில் விழிப்புணா்வு பேரணி

குழந்தை திருமணங்களைத் தடுக்க வலியுறுத்தி சாணாா்பட்டியில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சாணாா்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைத் திருமண விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள்.
சாணாா்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைத் திருமண விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள்.
Updated on
1 min read

குழந்தை திருமணங்களைத் தடுக்க வலியுறுத்தி சாணாா்பட்டியில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி வட்டாரத்தில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலையில், பொதுமக்களிடையே குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவா்கள் பங்கேற்ற பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சாணாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியை தலைமையாசிரியா் (பொறுப்பு) அ.வேணி தொடக்கி வைத்தாா். சாணாா்பட்டியிலுள்ள பிரதான வீதிகள் வழியாக மீண்டும் பள்ளி வளாகத்திலேயே பேரணி முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com