நத்தம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சிறுகுடி உயா் அழுத்த மின் பாதையில் சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, வியாழக்கிழமை (டிச.22) மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, ஓடுகம்பட்டி, நல்லகண்டம், குப்பைபட்டி, எட்டியம்பட்டி, குளத்துபட்டி, ஆனைமலைபட்டி பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய நத்தம் உதவி செயற்பொறியாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.