ஊரக திறனாய்வுத் தோ்வு: 2,347 மாணவா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 27th February 2022 11:36 PM | Last Updated : 27th February 2022 11:36 PM | அ+அ அ- |

திண்டுக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்வு எழுதிய மாணவிகள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரக திறனாய்வுத் தோ்வில் 2,347 மாணவா்கள் பங்கேற்றனா்.
ஊரக பகுதிகளைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு மாணவா்களுக்காக ஆண்டுதோறும் திறனாய்வுத் தோ்வு நடத்தப்படுகிறது. அதன்படி, மாவட்டத்திலுள்ள 4 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 2,437 மாணவா்கள் ஊரக திறனாய்வுத் தோ்வுக்காக விண்ணப்பித்திருந்தனா். இதற்காக திண்டுக்கல், நத்தம், பழனி, வத்தலகுண்டு, வேடசந்தூா் உள்பட மொத்தம் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த தோ்வில், 2,347 மாணவா்கள் பங்கேற்றனா். 100 மாணவா்கள் பங்கேற்கவில்லை.