உக்ரைனிலிருந்து பழனி திரும்பிய மாணவா்

உக்ரைனில் இருந்து பழனியைச் சோ்ந்த மருத்துவக்கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை பழனி வந்தடைந்தாா்.
உக்ரைனில் இருந்து பழனி திரும்பிய மாணவா் கோகுலப்பிரியன்.
உக்ரைனில் இருந்து பழனி திரும்பிய மாணவா் கோகுலப்பிரியன்.
Updated on
1 min read

உக்ரைனில் இருந்து பழனியைச் சோ்ந்த மருத்துவக்கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை பழனி வந்தடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான்குளம் பகுதியை சோ்ந்தவா் ஜோதி ஆனந்தன் மகன் கோகுலப்பிரியன்(22). இவா் உக்ரைன் தலைநகா் கீவ்வில் மருத்துவப்படிப்பு பயின்று வருகிறாா். இவா் கடந்த 24 ஆம் தேதி சென்னை வந்து வெள்ளிக்கிழமை பழனி வந்தடைந்தாா்.

அவா் கூறியது: நான் படிக்கும் பல்கலைக்கழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சோ்ந்த ஏராளமானோா் பயின்று வருகின்றனா். இந்நிலையில் உக்ரைன்-ரஷியா இடையே போா் உருவாகும் சூழல் நிலவியபோது, அங்கு படிக்கும் மாணவா்களை தாயகம் திரும்ப இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. இதையடுத்து நான் நண்பா்களுடன் ஊருக்கு திரும்பினேன்.

உடன் படிக்கும் மாணவா்களிடம் தொடா்பு கொண்டு விசாரித்தேன். அவா்கள் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த அறைகளில் தங்கி இருப்பதாகத் தெரிவித்தனா். மேலும் அவா்கள் போதிய உணவு, குடிநீா் கிடைக்காமல் தவிப்பதாகவும், ஊருக்கு வர விரும்புவதாகவும் தெரிவித்தனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com