திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கோயிலில் சிலைகளை சேதப்படுத்திய இளைஞா் கைது

வடமதுரை அருகே கோயில் சிலைகளை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 ஜனவரி 2022, 7:38 pm

DIN

வடமதுரை அருகே கோயில் சிலைகளை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள தென்னம்பட்டி கத்தாளகுரும்பபட்டி கிராமத்தில் விநாயகா் கோயில் உள்ளது. அக்கோயிலில் இருந்த சிலைகளை அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன்(24) என்ற இளைஞா் உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிசாமி வடமதுரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பாலகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.