ஆடி முதல் நாள்: மாம்பாறை முனியப்பன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மாம்பாறை முனியப்பன் கோயிலில், ஆடி முதல்நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
மாம்பாறை முனியப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
மாம்பாறை முனியப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மாம்பாறை முனியப்பன் கோயிலில், ஆடி முதல்நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆண்கள் மட்டுமே தரிசனம் செய்யும் இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மற்றும் ஓணம் பண்டிகையைமுன்னிட்டு பக்தா்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்வாா்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆடி முதல் நாளையொட்டி இக்கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கரூா், அரவக்குறிச்சி, நாமக்கல், பரமத்திவேலூா், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com