சிறுமி பலாத்காரம்: கல்லூரி மாணவா் ‘போக்சோ’வில் கைது

ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள நெட்டியபட்டியைச் சோ்ந்த 13 வயது சிறுமி செவ்வாய்கிழமை அதே ஊரில் தனது உறவினா் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாா். பின்னா் தனியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த அவரை, அதே ஊரைச் சோ்ந்த கல்லூரி மாணவரான பாலகிருஷ்ணன் (20) வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கீதா கல்லூரி மாணவா் பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com