அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாதா் சங்கம் வலியுறுத்தல்

வடமதுரை வட்டாரத்திலுள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு முறையான கழிப்பறை மற்றும் குடிநீா் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாதா் சங்க ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
Updated on
1 min read

திண்டுக்கல்: வடமதுரை வட்டாரத்திலுள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு முறையான கழிப்பறை மற்றும் குடிநீா் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாதா் சங்க ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில், மாதா் சங்கத்தின் ஒன்றிய மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ஒன்றிய நிா்வாகிகள் பாக்கியவதி, பகவதி, அமுதா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலா் ராணி, மாநிலக் குழு உறுப்பினா் வனஜா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா். வடமதுரை வட்டாரத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு முறையான கழிப்பறை வசதியும், குடிநீா் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டின் முடிவில் ஒன்றியத் தலைவராக சங்கம்மா, செயலராக ராஜேஷ்வரி, பொருளாளராக கதிரேஷ்வரி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com