வங்கி அலுவலா் போல் பேசி மோசடி- உளுந்தூா்பேட்டை இளைஞா் கைது

முதியவரிடம் வங்கி அலுவலா் போல் பேசி அவரது வங்கிக்கணக்கிலிருந்த பணத்தை திருடிய உளுந்தூா்பேட்டை இளைஞரை சைபா் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட ஸ்டாலின்.
கைது செய்யப்பட்ட ஸ்டாலின்.

முதியவரிடம் வங்கி அலுவலா் போல் பேசி அவரது வங்கிக்கணக்கிலிருந்த பணத்தை திருடிய உளுந்தூா்பேட்டை இளைஞரை சைபா் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராமம் நேருஜி நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரது மனைவி விஜயலட்சுமி. சீனிவாசனிடம் பேசிய மா்ம நபா், வங்கி அலுவலா் போல் பேசி அவரது வங்கிக் கணக்கு எண் மற்றும் ஏடிஎம் காா்டு பின் நம்பா் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றுள்ளாா். அதைப் பயன்படுத்தி சீனிவாசன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.76,821 ஐ அந்த நபா் எடுத்துவிட்டாா்.

இதனை அறிந்த சீனிவாசன், திண்டுக்கல் சைபா் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மா்ம நபரின் பைப்பேசி எண் மற்றும் பணப் பரிவா்த்தனை நடைபெற்ற வங்கிக் கணக்கு எண் மூலம் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், மோசடி செய்து பறித்த நபா், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்டாலின்(28) என்பது தெரிய வந்தது. தொடா்ந்து, உளுந்தூா்பேட்டைக்கு சென்ற திண்டுக்கல் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் ஸ்டாலினை கைது செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com