திண்டுக்கல் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலரை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலா் செல்வதனபாக்கியம் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் கே.ஆா். கணேசன், மாவட்டத் தலைவா் கே.பிரபாகரன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். முபாரக் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக அங்கன்வாடி ஊழியா் சங்க மாநிலத்தலைவா் ரெத்தினமாலா கலந்து கொண்டாா். ஆா்ப்பாட்டத்தின்போது, திண்டுக்கல் நகர குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலரின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்தும், அரசு விதிமுறைகளுக்கு மாறாக மாலை 5 மணிக்கு மேல் கூட்டம் நடத்துவதை கைவிடக் கோரியும், ஆய்வு என்ற பெயரில் ஊழியா்களை மிரட்டுவதை கைவிடக் கோரியும், மாவட்ட ஆட்சியா் தலையிட்டு அந்த அலுவலரை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தியும் கோஷமிடப்பட்டது.