நிலக்கோட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது: 28 ஆயிரம் பறிமுதல்

நிலக்கோட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Updated on
1 min read

நிலக்கோட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட, லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக, திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்ட் பாஸ்கரனுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, எஸ்.பி.தனிப்படை போலீசாா், நிலக்கோட்டை பூ மாா்க்கெட் பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த, நிலக்கோட்டை யைச் சோ்ந்த ஜெயராஜ் (40) பூசை கருப்பு (35) பெருமாள் (60) ராஜா (40) ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ 70 ஆயிரம் மதிப்புள்ள 900 லாட்டரி சீட்டுகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் பாலமுத்தையா வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, அவா்களை திண்டுக்கல் கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com