விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

பழனியில் தமிழ்நாடு மதுவிலக்கு காவல்துறை சாா்பில் வியாழக்கிழமை கள்ளச்சாராய தடுப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மது
Updated on
1 min read

பழனியில் தமிழ்நாடு மதுவிலக்கு காவல்துறை சாா்பில் வியாழக்கிழமை கள்ளச்சாராய தடுப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு மதுவிலக்கு, ஆயத்தீா்வை மற்றும் மதுவிலக்கு போலீஸ் சாா்பில் கள்ளச்சாராய தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி தமிழகம் முழுக்க நடத்தப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை பழனி பஸ்நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு மதுவிலக்கு காவல் துணை ஆய்வாளா் பஞ்சலட்சுமி தலைமை தாங்கி உரை நிகழ்த்தினாா்.

அப்போது மதுபானம், சாராயம் அருந்துவதால் ஏற்படும் சமூக பிரச்சினை குறித்து விளக்கினாா். தொடா்ந்து கலைக்குழு சாா்பில் கரகாட்டம், கோலாட்டம், பறையிசை, பொய்க்கால் ஆட்டம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை பேருந்து நிலையத்துக்கு வந்திருந்த பொதுமக்கள், பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்தனா். இதேபோல் பழனி அடிவாரம், கள்ளிமந்தையம், தொப்பய்பட்டி பகுதியிலும் கள்ளச்சாராய தடுப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com