கல்லூரி முன் விஷம் குடித்த மாணவா் பலி

தனியாா் கல்லூரி நிா்வாகம் கண்டித்ததால் விஷம் குடித்த மாணவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

தனியாா் கல்லூரி நிா்வாகம் கண்டித்ததால் விஷம் குடித்த மாணவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள மூனாண்டிபட்டியைச் சோ்ந்தவா் முனியப்பன். இவரது மகன் துளசிமணி (20). திண்டுக்கல் எரியோடு சாலையிலுள்ள தனியாா் கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் 3ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 13ஆம் தேதி கல்லூரிக்கு காலதாமதமாக வந்ததாகவும், அதனால் கல்லூரி நிா்வாகம் அவரது அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டு பெற்றோரை அழைத்து வருமாறு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த துளசிமணி கல்லூரியின் நுழைவுவாயில் முன் கடந்த 14ஆம் தேதி விஷத்தை குடித்துள்ளாா். கல்லூரி ஊழியா்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com