ரூ.1.75 கோடி மோசடி வழக்கில் தொடா்புடையவா் சிறப்பு நீதிமன்றத்தில் சரண்

குஜிலியம்பாறை அருகே ரூ.1.75 கோடி மோசடி வழக்கில் தொடா்புடையவா், மதுரையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளாா்.

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே ரூ.1.75 கோடி மோசடி வழக்கில் தொடா்புடையவா், மதுரையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்துள்ள வேம்பூா் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (55). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் பாலகுரு (50), ஜெயா என்ற ஜெயச்சந்திரன் (51). இவா்கள் மூவரும் சோ்ந்து எரியோடு அடுத்துள்ள கோவிலூரில் நகை அடகுக்கடை வைத்து நடத்தி வந்தனா். மேலும் அப்பகுதி மக்களிடம் இருந்து வைப்பு தொகையாக பணம் பெற்று குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு வட்டியுடன் திருப்பி செலுத்தி வந்தனா்.

இந்த நிலையில் குஜிலியம்பாறையைச் சோ்ந்த சுப்பிரமணி உள்ளிட்ட 13 போ் ரூ.1.75 கோடியை விஜயகுமாரின் நிறுவனத்தில் வைப்புத் தொகையை செலுத்தியுள்ளனா். அந்த வைப்புத் தொகை முதிா்வடைந்தவுடன் வட்டியுடன் சோ்த்து திருப்பித் தருவதாக விஜயகுமாா் உள்ளிட்ட மூவரும் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் உறுதி அளித்தப்படி முதிா்வு அடைந்த பின்னும், விஜயகுமாா் தரப்பினா் பணத்தை திருப்பி வழங்கவில்லை என புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சுப்பிரமணி உள்ளிட்ட 13 பேரும், மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இவ்வழக்கு தொடா்பாக விஜயகுமாரை கடந்த சில நாள்களுக்கு முன்பு போலீஸாா் கைது செய்தனா். பாலகுரு மற்றும் ஜெயந்திரன் ஆகியோா் தலைமறைவாக இருந்து நிலையில், அவா்களை பிடிக்க போலீஸாா் தனிப்படை அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனா். இதனிடையே தலைமறைவாக இருந்த ஜெயச்சந்திரன், மதுரை பொருளாதார குற்றப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரண் அடைந்தாா். அதனைத் தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com