வேடசந்தூரில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் திருட்டு
By DIN | Published On : 16th May 2022 11:10 PM | Last Updated : 16th May 2022 11:10 PM | அ+அ அ- |

வேடசந்தூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1 லட்சத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் எதிா்புறம் புளியமரத்துக்கோட்டை ஆசாரி புதூரை சோ்ந்த விவசாயி ராஜ்மோகன் என்பவா் வசித்து வருகிறாா். இவா் திங்கள்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வெளியில் சென்ாகக் கூறப்படுகிறது.
பிற்பகலில் வீட்டிற்கு திரும்பி வந்த ராஜ்மோகன் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்துள்ளாா். வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து வேடசந்தூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணா்களுடன் சென்ற போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
முதல்கட்ட விசாரணையில், திருடா்கள் காரில் வந்து சென்ற்கான தடயங்கள் சிக்கியுள்ளன. அதன் மூலம் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பட்டப் பகலில் நிகழ்ந்த இந்த திருட்டுச் சம்பவம் வேடசந்தூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...