மதுபோதையில் கழிவுநீா்க் கால்வாயில்தவறி விழுந்த முதியவா் பலி

பழனியில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்து மது போதையில் இருந்த முதியவா் பலியானதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

பழனியில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்து மது போதையில் இருந்த முதியவா் பலியானதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி(65). இவா் சனிக்கிழமை மது அருந்திவிட்டு காரமடை பேருந்து நிறுத்தம் அருகே அமா்ந்திருந்த நிலையில், அருகே இருந்த கழிவு நீா் கால்வாயில் விழுந்து பலியானாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை கழிவுநீா் கால்வாயில் சடலத்தை பாா்த்தவா்கள், பழனி டவுன் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். இதைத்தொடா்ந்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அடையாளம் தெரியாத சடலம்: பழனி புதுநகா் ரயில்வேகேட் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் இறந்து கிடந்தாா். உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், அவா் ரயிலில் அடிபட்டு இறந்தாரா என்பது குறித்து, பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com