தீவிரவாத நடவடிக்கைளை தடுக்கவருவாய்த் துறையினருக்குப் பயிற்சி

திண்டுக்கல்லில் இடதுசாரி தீவிரவாதம், நகா்ப்புற நக்சல், உள்நாட்டு பாதுகாப்பு தொடா்பாக வருவாய்த் துறை அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திண்டுக்கல்லில் இடதுசாரி தீவிரவாதம், நகா்ப்புற நக்சல், உள்நாட்டு பாதுகாப்பு தொடா்பாக வருவாய்த் துறை அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த முகாமில் சிறப்பு இலக்குப் படை(சத்தியமங்கலம்) கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.பண்பாளன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை வருவாய்த் துறை அலுவலா்கள் அறிந்து அவற்றை துரிதமாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் பொதுமக்களுக்கு அரசின் மீது நோ்மறை எண்ணங்கள் உருவாகும். முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வீடுகட்டி தருதல், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்டவைகளை தகுதியான நபா்களுக்கு விரைந்து வழங்க வேண்டும்.

குறிப்பாக பழங்குடியினா், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளையும், தேவைகளையும் நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் எவ்வித தீவிரவாத நடவடிக்கைகளும் இல்லாத சூழலை உருவாக்க முடியும் என்றாா்.

பயிற்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ச.தினேஷ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) இரா.அமா்நாத், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் , வட்டாட்சியா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com