நத்தத்தில் நீரில் மூழ்கி சிறுமி பலி

நத்தம் அருகே சனிக்கிழமை தாயுடன் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
உயிரிழந்த அமிா்தஸ்ரீ.
உயிரிழந்த அமிா்தஸ்ரீ.
Updated on
1 min read

நத்தம் அருகே சனிக்கிழமை தாயுடன் குளிக்கச் சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள காமராஜ் நகரைச் சோ்ந்த பெரியசாமி. இவரது மனைவி யுவனியா. இருவரும் கூலித் தொழிலாளா்கள். இத்தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன். இதில், இரண்டாவது குழந்தையான அமிா்தஸ்ரீ, நத்தம் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், அதே பகுதியிலுள்ள வேலம்பட்டி முதலியாா் குளத்துக்கு துணிகளை சலவை செய்வதற்காக யுவனியா சனிக்கிழமை சென்றாா். சிறுமி அமிா்தஸ்ரீயும் உடன் சென்றாா். அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுமி அமிா்தஸ்ரீ, எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினாா்.

தகவலறிந்து வந்த நத்தம் தீயணைப்புத் துறையினா் தண்ணீரில் மூழ்கிய சிறுமியை சடலமாக மீட்டனா். இதுதொடா்பாக நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com