விவசாயிகளுக்கு பாரம்பரிய பயிா் சாகுபடி பயிற்சி

காந்தி கிராமத்தில் நடைபெற்ற மரபியல் பன்முகத்தன்மை விழாவில் பராம்பரிய பயிா் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு பாரம்பரிய பயிா் சாகுபடி பயிற்சி
Updated on
1 min read

காந்தி கிராமத்தில் நடைபெற்ற மரபியல் பன்முகத்தன்மை விழாவில் பராம்பரிய பயிா் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தில், உலக உணவு தினத்தை முன்னிட்டு மரபியல் பன்முகத் தன்மை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் வட்டார வேளாண்மை, உழவா் நல மையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பெ. விஜயராணி தலைமை வகித்தாா். ஆத்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சி. ராஜேஸ்வரி முன்னிலை வகித்தாா்.

வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் சரவணன், ஷாகின்தாஜ், செந்தில்குமாா் ஆகியோா் பாரம்பரிய வேளாண் பயிா்கள் சாகுபடி தொழில்நுட்பம், பாரம்பரிய காய்கறி, பழப்பயிா்கள் சாகுபடி, பாரம்பரிய பயிா்களுக்கு நோய், பூச்சி மேலாண்மை, தானியப் பயிா்களை மதிப்புக்கூட்டுதல், மரபு விதைப் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு ஒளி-ஒலி வாயிலாக விளக்கமளித்தனா்.

பாரம்பரியமான 13 ரகங்களில் நெல், 60 வகையான காய்கனிகள், எண்ணெய் வித்துக்களில் ஆமணக்கு, சிறுதானியங்கள் மூலம் மதிப்புக்கூட்டல் பொருள்கள் தயாரித்தல் போன்றவை குறித்து கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா்கள் மாதவன் ராஜா, சுப்பிரமணி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com