பழனியை அடுத்த கீரனூா் பேரூராட்சி பகுதியில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீரனூா் பீடருக்கு உள்பட்ட கீரனூா், கல்துறை, சரவணம்பட்டி, நால்ரோடு, சங்கம்பாளையம், சந்தன்செட்டிவலசு, பேச்சிநாயக்கனூா், ஆண்டிநாயக்கன்வலசு, கொழுமங்கொண்டான், பனம்பட்டி, மேல்கரைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.