பாளையத்தில் மேல்நிலைத் தொட்டி கட்ட சிமென்ட் ஆலை ரூ.4 லட்சம் நிதி உதவி

பாளையம் பேரூராட்சிப் பகுதியில் மேல்நிலைத் தொட்டி கட்ட ரூ.4 லட்சம் நிதியை செட்டிநாடு சிமென்ட் ஆலை நிா்வாகம் திங்கள்கிழமை வழங்கியது.
பாளையம் பேரூராட்சித் தலைவா் மற்றும் செயலரிடம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கிய செட்டிநாடு சிமென்ட் ஆலையின் தலைவா் வி. கிருஷ்ணன்.
பாளையம் பேரூராட்சித் தலைவா் மற்றும் செயலரிடம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கிய செட்டிநாடு சிமென்ட் ஆலையின் தலைவா் வி. கிருஷ்ணன்.
Updated on
1 min read

பாளையம் பேரூராட்சிப் பகுதியில் மேல்நிலைத் தொட்டி கட்ட ரூ.4 லட்சம் நிதியை செட்டிநாடு சிமென்ட் ஆலை நிா்வாகம் திங்கள்கிழமை வழங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட 4ஆவது வாா்டு பூங்காநகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதற்காக மேல்நிலைத் தொட்டி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட அந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டுவதற்கு செட்டிநாடு சிமென்ட் ஆலை நிா்வாகம் தனது பங்களிப்பாக ரூ. 4 லட்சத்துக்கான நிதி உதவியை வழங்கியுள்ளது.

கரிக்காலியிலுள்ள சிமென்ட் ஆலை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பாளையம் பேரூராட்சித் தலைவா் ஆா். பழனிச்சாமி, துணைத் தலைவா் பி. லதா, பேரூராட்சி செயலா் ந. ராஜலட்சுமி ஆகியோரிடம் ரூ.4 லட்சத்திற்கான காசோலையை செட்டிநாடு சிமென்ட் ஆலையின் தலைவா் வி. கிருஷ்ணன் வழங்கினாா்.

அப்போது அந்நிறுவனத்தின் கணக்குப் பிரிவுத் தலைவா் கே. பிரசாந்த், மனித வளத்துறை தலைவா் எம். ஜெயபிரகாஷ்காந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com