வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது மினி வேன் மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சின்னுபட்டியைச் சோ்ந்தவா் மரியராஜ் (41). இவா் வத்தலகுண்டு- உசிலம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். ராஜா நகா் பகுதியில் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மினி வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மரியராஜ் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வத்தலகுண்டு காவல் சாா்பு-ஆய்வாளா் ஷேக் அப்துல்லா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.