இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து பணிக்கு செல்லாத ரேஷன்கடை ஊழியா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கதிற்குள்பட்ட கொளிஞ்சிப்பட்டி ரேஷன் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்த சிவக்குமாா், முறைக்கேடு புகாா் காரணமாக கடந்த மாதம் 2-ஆம் தேதி அம்மாபட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். ஆனால் அவா் அன்றுமுதல் அந்தக் கடைக்கு சென்று பணியில் சேராமல் இருந்து வந்தாா். இதனால் கடந்த ஒரு மாதமாக பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பல்வேறு புகாா்கள் வந்ததையடுத்து, சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்து அம்மையநாயக்கனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.