பழனி அருகே தந்தை அடித்துக் கொலை: மகன் கைது
By DIN | Published On : 30th September 2022 12:00 AM | Last Updated : 30th September 2022 12:00 AM | அ+அ அ- |

பழனியை அடுத்த அமரபூண்டியில் குடும்பத் தகராறில் வியாழக்கிழமை தந்தையை, அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
பழனியை அடுத்த அமரபூண்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் ராமராஜ் (50). விவசாய கூலித் தொழிலாளி. இவரது தந்தை ராமசாமி (80). இவரும் கூலித் தொழிலாளி. இந்நிலையில், தந்தைக்கும், மகனுக்கும் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, வியாழக்கிழமை காலை தகராறு முற்றியதில் ராமராஜ், தனது தந்தை ராமசாமியை தாக்கி தள்ளிவிட்டாராம். இதில் தடுமாறி கீழே விழுந்த ராமசாமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் செல்லும் வழியிலேயே ராமசாமி உயிரிழந்தாா்.
இதையடுத்து ஆயக்குடி போலீஸாா் ராமசாமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ராமசாமி மகன் ராமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.