ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன் வலசு, பொருளூா், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூா், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூா், கே.டி.பாளையம் ஆகிய பகுதியில் சனிக்கிழமை (ஏப். 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கே.சந்தனமுத்தையா இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.