கைதி மாடியிலிருந்து குதித்த விவகாரம்: உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

வத்தலகுண்டு காவல் நிலைய மாடியிலிருந்து கைதி குதித்த விவகாரத்தில் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
Updated on
1 min read

வத்தலகுண்டு காவல் நிலைய மாடியிலிருந்து கைதி குதித்த விவகாரத்தில் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் விஜயபாண்டியன். இவா் கடந்த 29-ஆம் தேதி இரவு திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, 3 போ் விஜயபாண்டியனிடமிருந்து கைப்பேசியைப் பறித்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராம்சேட் தலைமையிலான போலீஸாா் பேருந்து நிலையத்துக்குச் சென்றனா்.

அங்கு விஜயபாண்டியனிடம் கைப்பேசியைப் பறித்ததாக தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சோ்ந்த கரண்குமாா் (25), பாலமுருகன் (25), பிரதீவ் (26) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், 3 பேரையும் வத்தலகுண்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனா். அப்போது, கரண்குமாா் காவல் நிலையத்தின் மாடியிலிருந்து குதித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்:

இதுகுறித்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன், நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், காவல் நிலைய மாடியிலிருந்து கரண்குமாா் கீழே குதித்த விவகாரத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, உதவி ஆய்வாளா் ராம்சேட்டை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com