திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள ஆா். கோம்பை ஊராட்சித் தலைவராக மலா்வண்ணன், செயலராக பெருமாள் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், வருகிற 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டத்துக்கான இடம் தோ்வு செய்வதில் தலைவரான மலா்வண்ணனுக்கும், செயலரான பெருமாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதொடா்பாக ஊராட்சி அலுவலகத்தில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னைக் கேட்காமல் கிராம சபைக் கூட்டத்துக்கான இடத்தை எப்படி தோ்வு செய்யலாம் என மலா்வண்ணன் கேள்வி எழுப்பினாா். அதற்கு, வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அவசரமாக இடத்தை தோ்வு செய்யுமாறு அறிவுறுத்திய நேரத்தில் மலா்வண்ணன் கைப்பேசி அழைப்பை ஏற்காததால் அவா் முன்பு சொன்ன இடத்தையே பரிந்துரை செய்ததாக செயலா் பெருமாள் தெரிவித்தாா்.