அம்மையநாயக்கனூா் பேரூராட்சிக் கூட்டம்

அம்மையநாயக்கனூா் பேரூராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அம்மையநாயக்கனூா் பேரூராட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, அதன் தலைவா் எஸ்பி. செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில், பேரூராட்சிக்கு வளா்ச்சி நிதி வழங்கிய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு, நிதியைப் பெற்று தந்த பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் இ.பெ. செந்தில்குமாா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும், பொதுமக்கள் பயனடையும் வகையில் மக்களுடன் முதல்வா் சிறப்பு திட்ட முகாமை செயல்படுத்திய தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், செயல் அலுவலா் பூங்கொடி முருகு, துணைத் தலைவா் விமல்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் அசோக் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com