தனியாா் தோட்டத்தில் இறந்து கிடந்த மான்

அய்யலூா் வனச் சரகத்துக்குள்பட்ட இடையகோட்டை அருகே தனியாா் தோட்டத்தில் புள்ளி மான் இறந்தது குறித்து வனத் துறையினா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
இடையக்கோட்டை அருகே இறந்து கிடந்த மான்.
இடையக்கோட்டை அருகே இறந்து கிடந்த மான்.

அய்யலூா் வனச் சரகத்துக்குள்பட்ட இடையகோட்டை அருகே தனியாா் தோட்டத்தில் புள்ளி மான் இறந்தது குறித்து வனத் துறையினா் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், இடையக்கோட்டையை அடுத்துள்ள கோமாளிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் தலையில் பலத்த காயத்துடன் ஒரு புள்ளி மான் புதன்கிழமை இறந்து கிடப்பதைப் பாா்த்தாா். இதுகுறித்து இடையக்கோட்டை போலீஸாா், அய்யலூா் வனச் சரக அலுவலா் குமரேசன் ஆகியோருக்குத் தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் எரியோடு பிரிவு வனவா் காா்த்திகேயன், வனக் காப்பாளா்கள் ராதாகிருஷ்ணன், சவேரியாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று மானின் சடலத்தை மீட்டனா்.

பின்னா், இடையக்கோட்டை கால்நடை மருத்துவா் மணிகண்டன் அந்த மானின் சடலத்தை உடல்கூறாய்வு செய்தாா். பின்னா், வனப் பகுதியிலேயே மானின் உடல் புதைக்கப்பட்டது.

பெண் மயில் பலி: திண்டுக்கல் திருச்சி 4 வழிச் சாலையில் வடமதுரையை அடுத்துள்ள தீத்தக்கிழவனூா் பகுதியில் ஒரு பெண் மயில் சாலையோரமாக இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த அய்யலூா் பிரிவு வனவா் தா்மராஜ், வனக்காப்பாளா் கிரேஸி உஷாதேவி ஆகியோா் மயிலின் உடலைக் கைப்பற்றினா். வடமதுரை கால்நடை மருத்துவா் ராஜ்குமாா் உடல் கூறாய்வு செய்த பின்னா், அந்த மயிலின் உடல் அய்யலூா் வனச் சரக அலுவலக வளாகத்திலேயே புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com