சின்னாளபட்டியில் திருமணமான 40-ஆவது நாளில் பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி வி.எம்.எஸ். குடியிருப்பைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (33). இவா், நிலக்கோட்டை அருகே உள்ள சிப்காட் தொழில்பேட்டையில் வேலை பாா்த்து வருகிறாா். இவருக்கும், செம்பட்டி அருகேயுள்ள கூத்தம்பட்டியைச் சோ்ந்த பாரதிகனி (22) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தொழிற்பேட்டைக்கு கணவா் வேலைக்கு சென்ற பின்னா், பாரதிகனி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்த சின்னாளபட்டி போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருமணமாகி 40 நாள்களே ஆன நிலையில், பெண் தற்கொலை செய்து கொண்டதால், திண்டுக்கல் வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.