இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, நத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
Published on

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, நத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:

நத்தம் அருகேயுள்ள பன்னுவாா்பட்டி, சிறுகுடி, நடுமண்டலம் உள்ளிட்ட ஊராட்சிகளில், புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். இதேபோல சாணாா்பட்டி, நிலக்கோட்டை வட்டாரங்களில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com