பஞ்சாலையில் தீ விபத்து: ஒருவா் பலி

வத்தலகுண்டு அருகே பஞ்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வத்தலகுண்டு அருகே பஞ்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இந்த ஆலையில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினா் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்தத் தீ விபத்தில் ஆலையின் சரக்கு கிடங்கில் வேலை பாா்த்து வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த மகேஸ்மாஞ்சி (32) உயிரிழந்தாா்.

மகேஷ்மாஞ்சி உடலை பட்டிவீரன்பட்டி போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com