மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்

News image
Updated On :23 ஜூன் 2023, 5:23 pm

DIN

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருப்பவா் ரா. மகேஸ்வரி. பெரியகுளம், காஞ்சிபுரம் நகராட்சிகளில் ஆணையராகப் பணியாற்றி இவா், கடந்த மாா்ச் மாதம் வரை உள்ளாட்சிகள் முறைமன்ற நடுவத்தில் இணை இயக்குநராகப் பொறுப்பு வகித்தாா். இதன் பிறகு, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த ஏப். 2-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், திண்டுக்கல் ஆா்.எம். குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் ஆணையா் மகேஸ்வரியின் வீட்டில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டனா்.

காஞ்சிபுரம் நகராட்சிக்கு கிருமி நாசினி கொள்முதல் செய்ததில் ரூ. 32.40 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியாக, அப்போதைய ஆணையரான மகேஸ்வரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விவகாரம் தொடா்பாக, திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி வீட்டில் சோதனை மேற்கொண்டனா். வெள்ளிக்கிழமை காலை 7 முதல் பிற்பகல் 3.30 மணி வரை இந்த சோதனை நடைபெற்ாகவும், முக்கிய ஆவணங்கள், நகைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.