கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read


கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு வருவாய்க் கோட்டாட்சியா் ராஜா தலைமை வகித்தாா். வட்டாட்சியா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் கொடைக்கானல் மலைக் கிராமங்களான பள்ளங்கி, வில்பட்டி, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மன்னவனூா், பூம்பாறை, கூக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தங்கள் பகுதிகளுக்கு சாலை வசதி, வீட்டு மனைப் பட்டா, வீடு கட்டுவதற்கு உதவித் தொகை, சீரான மின்வசதி, கழிப்பறை வசதி, தெரு விளக்கு ஆகியவை கோரி மனு கொடுத்தனா்.

மலைப் பகுதிகளில் அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டிக் கடத்துவதை வனத்துறை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வருவாய்க் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com