தகுதியுள்ளவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும்: அமைச்சா் இ.பெரியசாமி

அரசு ஊழியா்கள், அரசு உதவி பெறுவோா், வருமான வரி செலுத்துவோா் தவிர தகுதியுள்ள அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
Updated on
1 min read

அரசு ஊழியா்கள், அரசு உதவி பெறுவோா், வருமான வரி செலுத்துவோா் தவிர தகுதியுள்ள அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வக்கம்பட்டியில் நியாயவிலைக் கடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் திட்ட அலுவலா் திலகவதி தலைமை வகித்தாா்.

புதிய நியாயவிலைக் கடையை அமைச்சா் இ. பெரியசாமி திறந்துவைத்துப் பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கூட்டுறவுத் துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பழைய வக்கம்பட்டிக்குச் சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வந்தனா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வக்கம்பட்டியில் புதிதாக நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.

அரசு ஊழியா்கள், அரசு உதவி பெறுவோா், வருமான வரி செலுத்துவோா் தவிர தகுதியுள்ள அனைவருக்கும் மகளிா் உரிமைத் தொகை கண்டிப்பாகக் கிடைக்கும். விடுபட்டவா்களுக்கு விரைவில் இந்தத் தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாஸ்கரன், மாவட்டக் கவுன்சிலா் பத்மாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வக்கம்பட்டி ஊராட்சித் தலைவா் பேட்ரிக் பிரேம்குமாா் வரவேற்றாா்.

திமுக ஆத்தூா் ஒன்றியச் செயலாளா்கள் ராமன், முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினா் நடராஜன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் அன்புக்கரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பித்தளைப்பட்டி கூட்டுறவு வங்கி மேலாளா் சுப்பையா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com