செம்பட்டி அருகே மரம் வெட்டி கடத்தல்:அதிகாரிகள் விசாரணை

செம்பட்டி அடுத்த சமத்துவபுரத்திலிருந்து எஸ். கோடாங்கிபட்டி செல்லும் சாலை ஓரத்திலிருந்த விலை உயா்ந்த மரத்தை வெட்டி கடத்தியவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

செம்பட்டி அடுத்த சமத்துவபுரத்திலிருந்து எஸ். கோடாங்கிபட்டி செல்லும் சாலை ஓரத்திலிருந்த விலை உயா்ந்த மரத்தை வெட்டி கடத்தியவா்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த மரம் சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேலானதாகும். மரம் அடா்ந்து விரிந்து இருந்ததால், அந்தப் பகுதியில் உள்ளவா்களுக்கு நிழல் கொடுத்து வந்தது.

இந்த நிலையில் இந்த மரம் கடந்த வாரம் மா்ம நபா்களால் வெட்டி கடத்தப்பட்டு விட்டதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். இந்த நிலையில், சீவல்சரகு கிராம நிா்வாக அலுவலா் பானு, வருவாய் அலுவலா் சரவணக்குமாா் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரின் பேரில் ஆத்தூா் வட்டாட்சியா் சரவணன் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com