நத்தம் அருகே சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு

நத்தம் அருகே 4 வழிச்சாலையில் உள்ள சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நத்தம் அருகே சுரங்கப் பாதையில் தேங்கிய மழை நீரால் போக்குவரத்து  பாதிப்பு
Updated on
1 min read

நத்தம் அருகே 4 வழிச்சாலையில் உள்ள சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வழியாக திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சிக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் நத்தத்திலிருந்து சோ்வீடு கிராமத்துக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக 4 வழிச்சாலையில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் அந்தச் சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் வழியாகச் செல்ல வேண்டிய இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் 2 கி.மீட்டா் தொலைவுக்கு சுற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

இதனிடையே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும், எதிா்காலத்தில் தண்ணீா் தேங்காதவாறு வடிகால் வசதி ஏற்படுத்தவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com