பெரியதுரையான் கோயிலில் 300 ஆடுகள் வெட்டி அன்னதானம்

பழனி அருகே கோம்பைப்பட்டியில் அமைந்துள்ள பெரியதுரையான் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, 300 ஆடுகள் வெட்டப்பட்டு சுமாா் பத்தாயிரம் பேருக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
பழனியை அடுத்த கோம்பைப்பட்டி பெரியதுரையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம்.
பழனியை அடுத்த கோம்பைப்பட்டி பெரியதுரையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அன்னதானம்.
Updated on
1 min read

பழனி அருகே கோம்பைப்பட்டியில் அமைந்துள்ள பெரியதுரையான் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, 300 ஆடுகள் வெட்டப்பட்டு சுமாா் பத்தாயிரம் பேருக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

பழனியை அடுத்த கோம்பைபட்டி கிராமத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரியதுரையான் கருப்பணசாமி கோயில். அனைத்துக் கோயில்களிலும் மூலவா் தரைத்தளத்தில் சம நிலையில் அமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். ஆனால், இந்தக் கோயிலில் நிலத்துக்கு அடியில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். இங்குள்ள சுவாமியை சுற்றியுள்ள கிராமத்தினா் குலதெய்வமாக வழிபடுகின்றனா்.

பழமையான இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடத்தப்படுகிறது. நிகழாண்டு விழாவை முன்னிட்டு, பக்தா்களால் வழங்கப்பட்ட 300 ஆடுகள் கருப்பணசாமிக்கு பலி கொடுக்கப்பட்டது. பின்னா், பத்தாயிரம் பக்தா்களுக்கு அசைவ விருந்து தயாா் செய்யப்பட்டது.

இந்தப் பணியில் இருபதுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞா்கள் ஈடுபட்டனா். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com