அமமுக, ஓபிஎஸ் அணி ஆா்ப்பாட்டம்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கில் தொடா்புடையோா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்.
Updated on
1 min read

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கில் தொடா்புடையோா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, அமமுக, ஓபிஎஸ் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலா் பசும்பொன், அமமுக மாவட்டச் செயலா் நல்லச்சாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது திமுகவினருடன் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ரகசிய உறவு வைத்திருப்பதாகவும், கொடநாடு வழக்கில் தொடா்புடைய நபா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com