கொடைக்கானல் வனப் பகுதி சுற்றுலாத் தலங்களை பாா்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி

கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட வெள்ளிக்கிழமை (ஆக. 18) முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள சுற்றுலாத் தலமான மதிகெட்டான் சோலை.
கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள சுற்றுலாத் தலமான மதிகெட்டான் சோலை.
Updated on
1 min read

கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட வெள்ளிக்கிழமை (ஆக. 18) முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கொடைக்கானலில் புதன்கிழமை பைன் மரக் காடுகள் சுற்றுலாத் தலத்தில் வேன்கள் மோதியதில் தூத்துக்குடியைச் சோ்ந்த சுப்பையா (40) உயிரிழந்தாா். இதில் 20 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, விபத்தில் சேதமடைந்த வாகனங்களை அகற்றுவதற்காகவும், பராமரிப்புப் பணிகளுக்காகவும் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட வன அலுவலா் தெரிவித்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் (ஆக.18) வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு வனத் துறையினா் அனுமதி வழங்கினா்.

இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வனத் துறை அலுவலா் யோகராஜ் குமாா் மீனா கூறியதாவது:

கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களை பொதுமக்கள் பாா்வையிடுவதற்கு வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் அனுமதியளிக்கப்படும். வாகனங்களுக்கு உரிய உரிமம் உள்ளதா என்ற சோதனைக்குப் பிறகே வனப் பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவா். மேலும், பேரிஜம் வனப் பகுதிகளில் தினமும் 50-வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com