சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்

காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, திண்டுக்கல், நத்தம் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது.
Updated on
1 min read

காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, திண்டுக்கல், நத்தம் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கு காா்த்திகை மாதத்தின் 3-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை 108 வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத்தொடா்ந்து, மூலவா் கைலாசநாதருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னா், 108 வலம்புரி சங்குகளில் இருந்த தீா்த்தத்தைக் கொண்டும் அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னா், ஆனந்தவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், கன்னிவாடி சோமலிங்கேஸ்வரா் கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி கோயில் உள்ளிட்ட பகுதி சிவன் கோயில்களில் சோமவார சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

நத்தம்: நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதா் சமேத செண்பகவல்லி அம்மன் கோயிலில் சோமவாரத்தையொட்டி, உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. மூலவா் கைலாசநாதா் செண்பகவல்லி அம்மனுக்கு பால், பழம், பன்னீா், விபூதி, சந்தனம், புஷ்பம் ,இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

முன்னதாக கோயில் வளாகத்தில் 1008 சங்குகள், மலா்களைக் கொண்டு சிவலிங்கம் வடிவில் அலங்கரிக்கப்பட்டன. இந்த பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com