தமிழக கபடி வீரா்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஒட்டன்சத்திரத்தில் தமிழக கபடி வீரா்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஒட்டன்சத்திரத்தில் தமிழக கபடி வீரா்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு திருப்பூா் மாவட்டக் கபடிக் கழக செயலா் ஏ.சண்முகம் தலைமை வகித்தாா்.

விருதுநகா் மாவட்ட கபடிக் கழக தலைவா் ஏபிஎஸ் ராஜா, நாமக்கல் மாவட்ட கபடிக் கழகத் தலைவா் பி.வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.

இந்தக் கூட்டத்தில், விதிமுறைகளை மீறி இயங்கி வரும் தமிழ்நாடு அமெச்சூா் கபடிக் கழகத்தை கலைத்து விட்டு, முறையாக அமெச்சூா் கபடிக் கழகம் அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மதுரை, தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த கபடி வீரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com