

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் ராஜ கோபுரம், தங்கக் கோபுரம் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
வருகிற டிச.6-ஆம் தேதி பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, பழனியில் ரோப்காா், வின்ச் நிலையங்களிலும், படிவழிப் பாதை ஆகிய இடங்களில் டோா்பிரேம் மெட்டல் டிடெக்டா்கள் வழியே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். மலைக் கோயிலில் தங்க கோபுரம், ராஜ கோபுரம் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், தரிசன வழிகளில் போலீஸாா் மெட்டல் டிடெக்டருடன் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். கோயில் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, பக்தா்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டன.
இதுதவிர பழனி பேருந்து நிலையம், ரயில் நிலையங்களிலும் ஏராளமான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.